எழுதுகோலை எடடா..

எழுதுகோலை எடடா:

மாண்ட மாந்த மண்டையோட்டிலிருந்து 
செய்வேன் ஓர் எழுதுகோல்.
வரலாறு நெடுக வெடித்தழுத
மக்களின் கண்ணீரிலிருந்து
பெறுவேன் எழுது மை.
எழுதுவேன் 
இனம் வீழ்ந்த வலியை.
குணம் தாழ்ந்த நிலையை.
மடிமை உற்ற கதையை.
மிடிமை பெற்ற முறையை.
அடிமையான வழியை.
அகந்தை என்னும் சிறையை.
அடக்கம் என்னும் நிறையை.
மொழியில் தூங்கும் இறையை.
உறங்கிப் போன பறையை.
தமிழன் மெய்யை.
சழக்கன் பொய்யை.

எழுதுவேன் எழுதுவேன்
இடைவிடாது எழுதுவேன்
நானோர் கவிதையென்று 
நானிலத்தில் உலவுவேன்.
*

இனிய கவிஞர்கள் நாள் வாழ்த்துகள்.

Comments

Popular Posts